search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிரவாதிகள் தாக்குதல்"

    • அனந்த்நாக் சண்டைக்குப்பின் பயங்கரவாதிகளை தேடும்பணி தீவிரம்
    • உயிரிழந்த பயங்கரவாதி யார்? என்பது குறித்து அடையாளம் காணப்படவில்லை

    ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக வீரர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயர் அதிகாரிகள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் பாரமுல்லா மாவட்டம் ஹர்லாங்காவில் உள்ள உரி பகுதியில் ராணுவ வீரர்கள் பாரமுல்லா போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

    சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி யார்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்? என்பது குறித்து அடையாம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.
    • ஓட்டல் நுழைவு வாயில் மீது கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல்.

    கிஸ்மாயு:

    சோமாலியா நாட்டின் துறைமுக நகரமான கிஸ்மாயுவில் உள்ள ஒரு ஓட்டலுக்குள் திடீரென புகுந்த தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.மேலும் அந்த ஓட்டலின் நுழைவு வாயில் மீது கார் வெடிகுண்டு மூலம் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கொடூர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் படுகாயம் அடைந்தனர். சோமாலியாவில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான அல்-ஷபாப் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

    இது குறித்த தகவல் அறிந்து, அங்கு விரைந்த சோமாலியா பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வந்ததுடன், அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான பொதுமக்கள் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

    ×